Online News Portal on Agriculture

24  மணி நேர  மாரத்தான் விதை திருவிழா 

திருச்சியில் ஒரு புதுமை நிகழ்ச்சி ..

0 130

24  மணி நேர  மாரத்தான் விதை திருவிழா 

-மித்ரா, திருச்சி

விதைகளை பேராயுதம் என்றார் நம்மாழ்வார். ஒவ்வொருஉழவனும் உள்ளூர் விதைகளை பாதுகாக்க, பாரம்பரிய ரகங்களை  சாகுபடி செய்ய வலியுறுத்தினார். ஆனால் உழவர் பெருமக்கள் விதைகளுக்காக பண்நாட்டு நிறுவனங்களையே பெரிதும் சார்ந்து உள்ள சூழல் உள்ளது. அந்த வகையில் பாரம்பரிய விதைகளைஉழவர்களிடம் பொது மக்களிடம் கொண்டும்  போய் சேர்க்கும் வகையிலும் உள்ளூர் விதை பாதுகாவலர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும்  திருச்சிராப்பள்ளி கிராமாலயா மற்றும் பசுமை சிகரம் தொண்டு நிறுவனம்   இணைந்து நடத்தும் 24 மணிநேர விதைத்திருவிழா  01.04.2025 காலை 9மணி முதல் 02.04.2025 காலை 9மணி வரை திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் வட்டம்,கொளக்குடிபட்டி கிராமத்தில்  கிராமாலயா பயிற்சி மைய வளாகத்தில் நடைபெறுகிறது .

Indian Organic Kattuyanam Rice at ₹ 95/kg in Erode | ID: 21610619591

பசுமை சிகர அறக்கட்டளை யோகநாதன் சிறுசோழன் வரவேற்கிறார். ஜெய்கிருஷ்ணா ,(ஓய்வு) வனத்துறை அலுவலர், முசிறி முன்னிலை  வகிக்க ,பத்மஸ்ரீ  தாமோதரன் ,நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர், கிராமாலயா நோக்கவுரை  வழங்குகிறார்.

நிகழ்ச்சியில் உயர்திரு. த. குருசாமி அவர்கள்   மதுரை உயர்நீதி மன்ற வழக்கறிஞர், தமிழக ஆறுகள் வள மீட்பு இயக்கம்,திரு. மகாதானபுரம் ராஜாராம்,காவேரி டெல்டா பாசன சங்கத்தலைவர், விழுப்புரம்.  திரு.மன்னா ஏகாம்பரம்,தஞ்சாவூர் பேராசிரியர்.புண்ணியமூர்த்தி நடேசன்,பசுமை குறியீட்டு ஆலோசகர்   ந. பிரவீண், பெங்களூரு, முனைவர் .வேல்முருகன்,இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம், புதுடில்லி. திருச்சிராப்பள்ளி, கிரியா அறக்கட்டளை   முனைவர்  கே.சி.சிவபாலன், சந்திரசேகர், தஞ்சாவூர் மேனாள் பொது பணித்துறை பொறியாளர் மருதமுத்து சேகர், நங்கவரம் சங்கரநாராயணன், கடவூர் நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம் ஒருங்கிணைப்பாளர்  வானகம் ரமேஷ்,    பட்டுவளர்ச்சித்துறை விஞ்ஞானி க .பொ. மதியழகன், சே. பிரிட்டோராஜ்,  உதவி செயற்பொறியாளர்  சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை, தலைமை செயலகம்,  சென்னை ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்குகின்றனர் . வேளாண்மை மற்றும் தோட்ட கலை  கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொள்கிறார்கள்

முதல் நாள் 01.04.25 அன்று அகில இந்தியா வானொலி திருச்சி பண்பலையில் வசந்த அழைப்பு நிகழ்ச்சியில்  காலை 9 மணி முதல் 10 மணி வரை நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது

முதல் நாள் 01.04.25 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை  திருச்சி ஸ்ரீ ஜெயரெங்கா இயற்கை மருத்துவமனை சார்பாக இலவச மருத்துவமுகாம் நடைபெறுகிறது

விதை சேகரிப்பாளர்களும் உழவர்களும் பொதுமக்களும் மாணவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

 

Leave A Reply

Your email address will not be published.