Online News Portal on Agriculture

தடையின்றி பயிர் கடன்… கூட்டுறவு துறை அறிவிப்பு

0 40

கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டில் 17.44 லட்சம் விவசாயிகளுக்கு, 13,342 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டது. நடப்பாண்டில் 14,000 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்மாதம், 15ம் தேதி வரை, 1.37 லட்சம் பேருக்கு, 1,102 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலத்தில், 94,749 விவசாயிகளுக்கு, 717 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டில் 14,641 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, 84 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. பயிர் கடன் தேவைப்படும் அனைத்து விவசாயிகளுக்கும் தகுதிக்கு உட்பட்டு கடன் வழங்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.