Online News Portal on Agriculture

பவர் டிரில்லர் மானியம்…

0 40

திருப்பூர் மாவட்டத்தில், தாராபுரம், திருப்பூர், உடுமலை பகுதி விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், ‘பவர் டிரில்லர்’ இயந்திரம் வாங்க மானியம் அளிக்கப்படுகிறது. மானியத்தொகை, விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். அதிகபட்சம் 85,000 ரூபாய் வரை மானியம் பெறலாம். பரிந்துரைக்கப்படும், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து விவசாயிகள் ‘பவர் டிரில்லர்’ வாங்கலாம்.

விருப்பமுள்ள விவசாயிகள், சிட்டா அடங்கல், ஆதார் கார்டு, வங்கிக்கணக்கு எண், போட்டோ ஆகியவற்றுடன், வேளாண் பொறியியல் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.

மேலும் விபரங்களுக்கு, திருப்பூர் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை 94425 29340, தாராபுரம் – 99427 03222, உடுமலை – 90039 30773 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.