Online News Portal on Agriculture

மூங்கில் வளர்க்கலாம் வாங்க…

0 35

தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை வாயிலாக, கோயம்புத்தூர் மாவட்டத்தில் முள்ளில்லா மூங்கில் நட்டு வளர்க்க, விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக பேசிய தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி, “தேசிய மூங்கில் இயக்கத்தின் கீழ், முள்ளில்லா மூங்கில் நட்டு, விவசாயிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் பயன்பெறலாம். வரப்பு பயிராகவும் மூங்கில் வளர்க்கலாம். அரசு நிறுவனங்கள் மற்றும் ஊராட்சி அலுவலகங்களுக்கு 100 சதவிகித மானியத்திலும், விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியத்திலும், மூங்கில் செடிகள் வழங்கப்படுகின்றன.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் https://www.tnhorticulture.tn.gov.in/ என்ற இணையத்தில் பதிவு செய்யலாம் அல்லது தோட்டக்கலைத்துறை இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். மூங்கில் நடவு செய்யும் விவசாயிகளுக்கு, சொட்டு நீர் பாசன வசதி மானியத்தில் அமைத்துக் கொடுக்கப்படும்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.